குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?
Jul 23, 2021
முன்னுரை
எந்த நேரத்திலும் எந்த பருவத்திலும் மாரடைப்பு ஏற்படலாம். குளிர் காலத்தில் மாரடைப்பு ஆபத்து அதிகரிக்கும் என்பதைக் காட்ட பல மருத்துவ சான்றுகள் உள்ளன. மிகவும் குளிரான நிலையில் உறைபனி மற்றும் தாழ்வெப்பநிலை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பது நன்கு அறியப்பட்ட விஷயம்.
ஆனால் பெரும்பாலும் புரிந்து கொள்ளப்படாதது என்னவென்றால் குளிர்ந்த காலநிலை தீவிரமாக இல்லாவிட்டாலும் கூட இதயத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி மாரடைப்பிற்கு வழிவகுக்கும்.
காரணங்கள்
குளிர்ந்த நிலையில் மாரடைப்பு அதிகமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. அவை பின்வருமாறு:
-
குளிர் காலங்களில் இரத்த நாளங்கள் சுருங்கக்கூடும். இது உடலுக்கு இரத்த ஓட்டத்தை குறைத்து, வளர்சிதை மாற்றத்தில் அழுத்தத்தை அதிகரிக்கிறது. இதனால் இரத்த அழுத்த அளவும் அதிகரித்து இதயத்தில் தேவையற்ற அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.
-
குளிரினால் கரோனரி தமனிகளிள் (Coronary Artery) ஏற்படும் சுருக்கம் ஆஞ்சினா (Angina) தாக்குதல்களின் தீவிரத்தையும் அதிர்வெண்ணையும் அதிகரிக்கிறது.
-
குளிர்ந்த நிலையில் உங்கள் உடல் வெப்பத்தை விரைவாக இழக்கும்போது உங்கள் உடலின் ஆரோக்கியமான வெப்பநிலையை பராமரிப்பது கடினம். அதிக சூடான இரத்த ஓட்டம் தேவை படுவதால் இது இதயத்தில் அதிக சிரமத்தை ஏற்படுத்துகிறது.
-
இந்தியாவில் பல விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைகள் குளிர் காலங்களில் நடைபெறும். உணவு, குடிப்பழக்கம், கொண்டாட்டம் மற்றும் தூக்கமின்மை இவை அனைத்தும் இதயத்தில் அழுத்தத்தை அதிகரிக்கும்.
-
விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகைகள் உணர்ச்சி ரீதியான எதிர் விளைவுகளை ஊக்குவிக்கின்றன. அவை கட்டுப்பாடில்லாமல் இருந்தால் இதய அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
-
இந்தியாவில் குளிர்காலம் இன்பத்திற்காக பயணிக்கும் பருவமாகவும் இருக்கிறது. ஓய்வு மற்றும் இயற்கை காட்சிகளை ரசிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும், அன்றாட நடைமுறை மற்றும் செயல்பாடுகளில் ஏற்படும் பெரிய மாற்றங்கள் இதயத்தில் அதிக சுமையை ஏற்படுத்துகின்றன.
-
மிகவும் குளிரான சூழ்நிலையில், மக்கள் சூடாக இருக்கும் இடத்திலேயே தங்க முனைகிறார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும் அந்த நிலைமை ஏற்பட்டால், இரத்த ஓட்டம் மெதுவாக ஆகாமல் இருக்க நீங்கள் போதுமான உடற்பயிற்சியைப் பெற முயலுங்கள்.
-
குளிர் காலங்களில் சளி, தொண்டை வலி, இருமல் போன்ற சிறு வியாதிகள் வருவது இயல்பான ஒன்று. இவை பொதுவாக பலருக்கு சிறிய கோளாறே தவிர வேறொன்றுமில்லை என்றாலும், மற்ற காரணிகளால் ஏற்கனவே இதய அழுத்தத்தில் இருக்கும் ஒரு நபருக்கு அவை தீவிரமான காரணிகளாக இருக்கலாம்.
ஆபத்து காரணிகள்
நீங்கள் குளிர்ந்த காலநிலையில் இருக்கும்போது ஏதேனும் திடீர் மன அழுத்தம் அல்லது அசௌகரியத்தை உணர்ந்தால், குறிப்பாக மார்பு வலி என்றால் தாமதமின்றி உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும், இதய நிபுணருக்கு முன்னுரிமை கொடுக்கவும். இதயத்தில் எந்த அழுத்தத்தையும் வைப்பதை தவிர்த்து உங்கள் இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதை இதய நிபுணரிடம் உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
-
முதல் மற்றும் வெளிப்படையான ஆபத்து காரணி ஏற்கனவே இருக்கும் உங்கள் இதய நிலை. உங்கள் இதயத்தில் பிரச்சனை தொடங்குகிறது என்றால், இது தான் நடக்கும் என்று நீங்களே முடிவு செய்யாமல் இது நடக்கக்கூடும் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
-
மாரடைப்புக்கு பங்களிக்கும் மற்றொரு காரணி வயது. வயதானவர்கள் குளிரான சூழ்நிலையில் சூடாக இருப்பது மிகவும் கடினம். ஏனெனில் மெதுவான வளர்சிதை மாற்றத்தால் இரத்த ஓட்டத்தின் வாயிலாக உடலுக்கு வெப்பம் சேர்ப்பது சிக்கலாகிறது. அத்தகைய சூழ்நிலையில், அதிக இரத்தத்தை இதயம் பம்ப் செய்ய முயலுவதால் மன அழுத்தம் அதிகரிக்கிறது.
-
உங்களுக்கு தற்போதுள்ள நோய் அல்லது நோயின் மீட்பு நிலையில் இருப்பதன் மூலம் உடல் வலுவாக இல்லை என்பதே பொருள். இது தொற்றுநோய்களின் அபாயத்திற்கு உங்களைத் திறந்து விடுகிறது. சில நோய்களால் இதயத்தில் அதிக சுமைகளை திணிக்க முடியும்.
எப்படி தடுக்கலாம்?
குளிர்காலத்தில் மாரடைப்பைத் தடுப்பது இயல்பறிவு சார்ந்த விஷயம்.
-
சுறுசுறுப்பாக இருங்கள். நீங்கள் எந்தவொரு உடல் உழைப்பிலாவது ஈடுபட்டிருந்தால் சூடான ஆடைகளை அணியுங்கள். இதனால் உங்கள் உடலை எந்தவொரு திடீர் வெப்பநிலை மாற்றத்திற்கும் உட்படுத்தாமல் நீங்கள் வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ளலாம்.
-
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். குளிர்ந்த வானிலை விரைவான நீரிழப்பை ஏற்படுத்தும். இது வளர்சிதை மாற்று அமைப்பைக் சிரமத்திற்கு உள்ளாக்குகிறது.
-
ஜீரணிக்க எளிதான லேசான உணவை உண்ணுங்கள். பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்களில் நீங்கள் அதிக இனிப்புகளை உட்கொள்வதில்லை என்று உறுதி எடுங்கள்.
-
வீட்டிற்குள் இருந்து வெளியில் அடிக்கடி செல்வதை தவிர்க்கவும். திடீர் வெப்பநிலை மாற்றங்கள் உங்கள் உடலையும் இதயத்தையும் சிரமத்திற்கு உள்ளாக்கும்.
-
உடல்நிலை சரியில்லையெனில், மருத்துவரை அணுகவும்.
-
நீங்கள் ஒரு இதய நோயாளி என்றால், குளிர்காலத்தில் நீங்கள் எடுக்க வேண்டிய சிறப்பு முன்னெச்சரிக்கைகள் குறித்து உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை கேட்கவும்.
-
உங்களுக்கு இருதய பிரச்சினைகளின் வரலாறு இல்லை, ஆனால் மார்பு அல்லது கையின் மேற்பகுதியில் ஏதேனும் வலி அல்லது அசௌகரியம் இருந்தால், தாமதமின்றி மருத்துவரை அணுகவும். அது ஒன்றும் இல்லாமல் இருக்கலாம், ஆனால் இது மாரடைப்பாக மாறுவதற்கு முன்பே இருதயப் பிரச்சினையை கண்டுபிடிப்பதற்கான ஒரு வழியாகவும் இருக்கலாம்.
முடிவுரை
தங்கள் இதயத்தின் மேல் அக்கறை உள்ள அனைவரும் 6 மாதத்திற்கு ஒருமுறை இதய பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதுதான், நம்மை பாதித்துள்ள நோய்களை அறிந்து அவற்றிற்கு முறையான சிகிச்சைப் பெற முடியும்.
“ஆரோக்கியமான இதயம் உங்கள் பலத்தின் முக்கிய ஆதாரம்.”
Recent Post

Why Should You Book Lab Tests Online?
_(1)_CAT_1640504567.jpg)
ஸ்மார்ட் போன்களால் ஏற்படும் பிரச்சனைகள்

Type 2 Diabetes Mellitus

Type 1 Diabetes Mellitus
_CAT_1684759383.jpg)
Tooth Cavities

Understanding Diabetes: Fasting and Other Essential Sugar Tests

Top 10 Essential Skincare Tips for Healthy and Glowing Skin

Summer Skincare Routines and Sunscreen Recommendations

5-Minute Skincare Routine for Oily Skin

5-Minute Skincare Routine for Dry Skin